மேற்குவங்க மாநிலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ அசித். இவருக்கு பஞ்சாயத்து பெண் உறுப்பினர் ரூமாராய் பால் என்பவர் மசாஜ் செய்துவிடும் புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எம்எல்ஏவின் கால்களுக்கு மசாஜ் செய்து விடும் புகைப்படத்தை ரூமாராய் தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்து, இதற்கு தலைப்புகள் தேவையில்லை. அவர் என்னுடைய வழிகாட்டி. அவர் என்னுடைய கடவுள். அவருக்கு சேவை செய்வதற்காக நான் என்றென்றும் நன்றி உள்ளவளாக இருப்பேன் என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு மாநில பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில் எம்எல்ஏக்கள் கட்சியில் உள்ளவர்களை அடிமைகள் போல் நடத்துவதாகவும் விமர்சித்துள்ளனர். ஆனால் எம்எல்ஏ அசித் நான் கட்சியில் உள்ள அனைவருக்கும் தந்தை போன்றவன். ரூமாராய்க்கு நான் மூத்த சகோதரன் போன்றவன். அண்மையில் நான் பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் அதிலிருந்து என்னுடைய உடம்பும் முழுமையாக குணமடையாததால் தான் எனக்கு தற்போது ரூமாராய் உதவிகள் செய்துள்ளார் என்று கூறியுள்ளார். இருப்பினும் புகைப்படங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருவதோடு மேற்குவங்க அரசியலிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.