உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள குப்தா காலனி பகுதியில் நடந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது ஊர்மிளா கட்டியார் (35) என்ற பெண் தனது 2 மகன்களுடன் வசித்து வந்தார். ஊர்மிளாவின் கணவர் 17 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் இவர் ரஞ்சித் என்ற நபருடன் கடந்த 17 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார்.

இவருடைய மூத்த மகன் 12 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், இளைய மகன் 10 ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மூத்த மகன் வீட்டில் இருந்தபோது, ஊர்மிளா அவரை பாத்திரம் கழுவுமாறு கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த மூத்த மகன் தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென துப்பட்டாவால் தாயின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டார்.

அதன் பின் அவரது உடலை படுக்கைக்கு கீழ் வெளியே தெரியாமல் மூடி வைத்தார். இதைத்தொடர்ந்து பள்ளிக்கு சென்று வீட்டிற்கு திரும்பி இளைய மகன், தாயை தேடிய போது மூத்த மகன் அமைதியாக இருந்தார். சந்தேகமடைந்த இளைய மகன் வீடு முழுவதும் தேடிய போது படுக்கையின் அருகில் இருந்து துப்பட்டா தெரிந்ததால் தாய் மயக்க நிலையில் இருப்பதை கண்டார்.

உடனடியாக காவல் நிலையத்திற்கும், அவருடைய மாமாவிற்கும் தகவல் கொடுத்தார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மூச்சுத் திணறிய நிலையில் இருந்து ஊர்மிளாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.

இது தொடர்பாக மூத்த மகனை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் குடும்பங்களில் ஏற்படும் மன அழுத்தங்களை கவனமாக கையாளுவது அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.