தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் என்ற பெயரில் இரண்டு பாகங்களாக படத்தை இயக்கினார். இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி உலகம் முழுவதும் 500 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான், பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சோபிதா துலிபாலா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

தற்போது பொன்னியின் செல்வன் படக்குழு ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிப்பதற்காக அடிக்கடி வீடியோ வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை ரீவைண்ட் செய்யும் விதமாக லைக்கா நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.