கேரளா மாநிலம் காசர்கோடு மேங்காடு பகுதியில் மகின் ராஃபி, ரஹிமா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அபு தாஹிர் என்ற ஒரு வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று, அந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு இரும்பு கதவு திடீரென்று அந்த சிறுவனின் மேலே விழுந்தது. இதனை அறிந்த பெற்றோர்கள் அந்த சிறுவனை கதவின் கீழ் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அதோடு அந்தக் கதவின் இடை சுமார் 8 குவின்டல்கள் இருக்கும் என்று தெரியவந்துள்ளது.