1917 ஆம் ஆண்டு முதல் உலகப்போரின் போது ஒட்டமான் பேரரசை வீழ்த்திய பிரிட்டிஷ் படைகள் பாலஸ்தீனத்தை கைப்பற்றின. அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் அர்தூர் பால்பேர் பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கு தனிநாடு நிச்சயம் அமையும் என வாக்குறுதி அளித்தார். 1922 ஆம் ஆண்டு லீக் ஆப் நேசன்ஸ் என்ற சர்வதேச நாடுகளின் கூட்டமைப்பு பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கு பாதுகாப்புடன் கூடிய தனிநாடு ஒன்று அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றியது.

இந்நிலையில் பாலஸ்தீனத்தில் மெல்ல யூதர்களின் கை ஓங்கவே அரேபியர்கள் புரட்சியில் ஈடுபட்டனர். 1936இல் முதல் 1939 வரை நடந்த இந்த புரட்சியை பிரிட்டிஷ் அரசு  அடக்கியது. 1947 ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தை இஸ்ரேல்,  பாலஸ்தீனம் என இரண்டாக பிரித்து ஐநா தீர்மானம் நிறைவேற்றியது. இவை அடுத்து அரேபிய நாடுகளுக்கும்,  இஸ்ரேலுக்கும் இடையே போர் மூண்டது.

8 மாதங்கள் நடைபெற்ற போரில் இஸ்ரேல் வெற்றி பெற்று,  1948 ஆம் ஆண்டு மே 14 ஆம் நாள் இஸ்ரேல் உருவானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1967 ஆம் ஆண்டு ஆறு நாட்கள் நடைபெற்ற போரில் எகிப்து, ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளை வென்ற இஸ்ரேல்,  அந்நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு ஜெருசலேம், மேற்கு கரை,  காசா முனை, மற்றும் கோலன் குன்றுகளை கைப்பற்றியது.

கிழக்கு ஜெருசலேம், மேற்கு கரை,காசா முனை மற்றும் கோலன் குன்றுகளில் இஸ்ரேலிய குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 1973 மற்றும் 1982 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் இப்பகுதிகளை மீட்க அரேபிய நாடுகள் செய்த முயற்சிகள் தோல்வியை தழுவின. 1993 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் இடையே பாலஸ்தீனத்தை தன்னாட்சிப் பிரதேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கையானது. 2005 ஆம் ஆண்டு யாசர் அராபத் மறைவுக்கு  பிறகு முகமது அப்பாஸ் என்பவர் பாலஸ்தீன அதிபராக பொறுப்பேற்றார்.

அதே ஆண்டு காசா பகுதியை விட்டு இஸ்ரேல் வெளியேறியது. 2007 ஆம் ஆண்டு ஹமாஸ் என்ற அடிப்படைவாத அமைப்பு காசா பகுதியை கைப்பற்றியது. அப்போது முதல் இஸ்ரேலுக்கும் ஹமாஸ்சுக்கும் இடையே கடுமையான  மோதல் நடைபெற்று வருகிறது. கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி அரேபியர்களின் புனித தலமாகவும்,  மசூதியை சுற்றியுள்ள

Western Wall என்ற Temple Mount  யூதர்களின் புனித தலமாகவும் உள்ளது.  ஒருங்கிணைந்த ஜெருசலேமை இஸ்ரேல் தமது தலைநகராக அறிவித்துள்ளது. எனினும் அதை ஏற்க மறுக்கும் பாலஸ்தீனம், அந்த பகுதி தங்களுக்கே சொந்தம் என போராடி வருகிறது. ஒவ்வொரு வருடமும் இஸ்ரேல் கிழக்கு ஜெருசலேமை கைப்பற்றிய தினத்தன்று யூதர்களால் குடி  அணி வகுப்பு நடத்தப்படுகிறது. அரேபியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நடத்தப்படும் அணிவகுப்பே இருதரப்பினருக்கும் இடையேயான மோதல் என்பதனை தொடக்கப் புள்ளியாக உள்ளது.

இந்நிலையில் ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதிக்குள் இஸ்ரேலியர்கள் நுழைந்ததால் ஹமாஸ் குழுவினர் ஆத்திரம் அடைந்தனர். இஸ்ரேலியர்களுக்கு துணையாக நாட்டு ராணுவமும் அல் அக்சா மசூதிக்குள் நுழைந்ததால் பதற்றம் ஏர்பட்டது.  ஐந்து நாட்களுக்கு மேலாக அல் அக்சா மசூதியில் இஸ்ரேலியர்கள் தங்கி இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து இஸ்ரேலியர்கள் மீது போரை தொடங்கியது ஹமாஸ்க் குழு. தற்போதுவரை இந்த சண்டை மனடைந்து வருவது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.