தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சுலக்சனா. இவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். கடந்த 1982-ம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த தூறல் நின்னு போச்சு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சுலக்சனா அதன்பிறகு ரஜினி, கார்த்தி என பல முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்தார். தமிழை தாண்டி பிறமொழிகளிலும் நடித்துள்ள சுலக்சனா சமீபத்திய பேட்டியில் தான் வாழ்வில் நடந்த சில சுவாரசியமான விஷயங்களை கூறியுள்ளார்.

அதாவது நடிகர் கார்த்தியுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்த போது அவர் நடிகை சுலக்ஷனாவிடம் உன்னை பார்த்தால் ஒரு பொண்ணு என்கிற ஃபீலிங் வரவில்லை என்று கூறியுள்ளார். அதோடு உன்னை பார்த்தால் என்னுடைய பாய் பிரண்ட் போன்று தான் இருக்கிறது என்று கூறி நடிகை சுலக்ஷனாவை அடிக்கடி கிண்டல் செய்துள்ளார். மேலும் இந்த தகவலை நடிகை சுலக்சனா கூறியுள்ளார்.