திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி தொட்டியம் என்ற பகுதியில் ராஜேஸ்வரி (65) என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரை அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் கை, கால்களை கட்டி வைத்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர்.

போலீசாரிடமிருந்து தப்பிப்பதற்காக மூதாட்டியின் வீட்டில் மிளகாய் பொடியையும் தூவி விட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் நகை மற்றும் பணத்திற்காக மூதாட்டியை கொலை செய்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மூதாட்டியை கொலை செய்த மர்ம நபர்களை தற்போது போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.