ஐசிஐசிஐ வங்கியில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அதில், ஒரு வங்கி அதிகாரி தான் கொடுத்த இலக்கை (Target) முடிக்காத ஒரு இளைய ஊழியரைத் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி கடுமையாகத் திட்டுகிறார். “கடந்த 15 நாட்களில் என்ன வேலை செய்தாய்?” என்று கேட்டு, மற்ற ஊழியர்கள் முன்னிலையில் அந்த ஜூனியர் ஊழியரை மோசமாக அவமானப்படுத்துகிறார். வேலை செய்ய விருப்பம் இல்லை என்றால், ராஜினாமா செய்துவிடுமாறும் அவர் வற்புறுத்துகிறார்.
💥ABSOLUTE SHOCKER FROM ICICI BANK💥
Watch how a RM at @ICICIBank brutally humiliates a staff member in front of everyone demanding “what business have you done in the last 15 days?” and calling them out like they’re worthless.
– Accused of doing nothing but coming to enjoy
-… pic.twitter.com/Y3CSFfcisP— Nitin Tyagi (@iNitinTyagi) December 10, 2025
இந்த வீடியோவை பார்த்த மக்கள், வேலை செய்யும் இடங்களில் ஊழியர்களை இப்படி நடத்துவது தவறு என்று கோபத்துடன் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், சிலர் இலக்கை முடிக்க வேண்டியது ஊழியர்களின் கடமை என்று கூறி அந்த அதிகாரியை ஆதரித்தும் பேசி உள்ளனர். வேலை பார்க்கும் இடத்தில் உள்ள நெறிமுறைகள் பற்றி இந்த வீடியோ பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
