தமிழகத்தில் கடந்த சில தினங்களாக சமூகவலைதளங்களில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி வந்தது. இதுபற்றி அறிந்த முதல்வர் ஸ்டாலின் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கையானது மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் சென்னை புழலில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்களுடன், காவல்துறை ஆலோசனை கூட்டம் நடந்தது.

தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், காவல்துறை உதவி ஆணையர் ஆதிமூலம் பங்கேற்று தொழிலாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். வதந்திகளை நம்பவேண்டாம் என கூறிய அவர், பிரச்சினை ஏற்பட்டால் உடனே காவல்துறையை அணுகும்படி அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து தமிழகத்தில் வேலை பார்க்க சம்மதம் தெரிவித்து, வடமாநில தொழிலாளர்கள் செல்போன் விளக்குகளை ஒளிரவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதோடு தமிழகத்தில் பணிபுரிவதில் எங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தனர்.