
மதுரை மாவட்டத்தில் நடத்தப்பட்ட முருகர் மாநாடு குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.
அதில் அவர் கூறியதாவது, முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணாவை விமர்சிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டது குறித்து எங்கள் அறிக்கையில் நாங்கள் தெளிவாக கூறிவிட்டோம்.
தமிழ்நாடே கொதித்துப் போய் உள்ளது பெரியாரையும், அண்ணாவையும் படித்தவர்கள் யாரும் தமிழ்நாடு அரசியலில் தலையெடுத்தது கிடையாது.
அதனை மக்களே எதிர்க்கும் போது அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கு?, அதை பெரிதாக்க வேண்டிய அவசியம் கிடையாது. அதனை மக்களே பார்த்துக் கொள்வார்கள்.
மேலும் பேசிய அவர், “நாங்கள் 100 மாநாடுகள் நடத்தி திமுகவிற்கு சேர்க்க வேண்டிய ஓட்டை, எங்களுக்கு ஒரே மாநாட்டில் சேர்த்து கொடுத்து விட்டார்கள்”என கூறினார்.