அண்மைக்காலமாக திமுக தலைமையிலான தமிழக அரசு தொடர்ச்சியாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள், நிர்வாகிகள் மற்றும் சமூக வலைதள பொறுப்பாளர்களை தொடர்ச்சியாக கைது செய்து வருகிறது.  ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சூர்யா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து தற்போது அண்ணாமலை மேற்கொண்டு வரும் என் மண், என்  மக்கள் பாதயாத்திரையின்  இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய அமர்பிரசாத்ரெட்டி உள்ளிட்ட ஆறு நிர்வாகிகள்  நேற்றைய தினம் கைது செய்தது.

கைது செய்யப்பட்டவர்களை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்றைய தினம் நேரடியாக அவர்களுடைய இல்லங்களுக்கு சென்று உறவினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்த தகவல் அகில இந்திய பாஜக தலைமைக்கு தமிழக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் தற்போது தேசிய பாஜக தலைவர் ஜே.பி நட்டா தமிழகத்திற்கு அனுப்புவதற்காக நான்கு பேர் கொண்ட குழுவை அறிவித்து அறிவித்து வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் பாஜக தொண்டர்கள் மாநில அரசால் எதிர்கொள்ளும் பிரச்சனை குறித்து சதானந்த கவுடா, சத்திய பால் சிங், புரந்தேஸ்வரி, பி.சி. மோகன் ஆகியோர் கொண்ட குழு ஆய்வு செய்ய இருக்கின்றது.