தமிழீழ விடுதலையை விரைவில் பிரபாகரன் அறிவிக்க உள்ளதாகவும், சர்வதேச சூழல்கள் அதற்க்கு சாதகமாக இருப்பதாகவும் பழ.நெடுமாறன் தெரிவித்து இருக்கின்றார்.

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும், அவர் குடும்பத்தாருடன் நலமாக இருப்பதாகவும் பழ. நெடுமாறன் தெரிவித்திருக்கக்கூடிய தகவல் தற்போது தமிழீழ  இனத்திற்காக போராடியவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அவர் உண்மையில் உயிரோடு இருக்கிறாரா ? பல நெடுமாறன் எதன் அடிப்படையில் இந்த கருத்துக்களை பொதுவெளியில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து இருக்கிறார் என்ற கேள்வி எழுந்திருக்க கூடிய அதேநேரத்தில் இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சிபிஐயும் முன் வந்திருக்கிறது.  இன்னும் சில நிமிடங்களில் சிபிஐ  வளையத்திற்குள் பழ. நெடுமாறன் வருவார் என்று சொல்லப்படுகின்றது.

இந்நிலையில் தான் அவர் கூறிய தகவல்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது. அவர் பேசிய தகவல்கள், பிரபாகரன் உயிரோடு தனது குடும்பத்தாருடன் நலமாக வாழ்ந்து வருவதாகவும், அவர் உளவுப் பிரிவு தலைவராக இருந்த பொட்டு அம்மான்னும் உயிரோடு இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார். அவர் ஆப்பிரிக்கா கண்டத்தில் இருக்கக்கூடிய ஒரு நாட்டில் இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.

பொட்டு அம்மான்னும் தம்முடன் தொடர்பில் இருப்பதாக பழ. நெடுமாறன் தெரிவித்திருக்கக்கூடிய இந்த தகவல் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இந்தியாவினுடைய உளவு அமைப்பான RAW தொடர்ந்து பொட்டு அம்மான்னை தேடி வரக்கூடிய நிலையில், அவர் உயிரோடு இன்னும் இருக்கிறாரா ? எந்த நாட்டில் இருக்கிறார்கள் ? பழ. நெடுமாறன் கூறுவது கூறுவது போல இந்த தகவல்கள் உண்மையா ? என பலரும் இவர் கூறிய கருத்துக்களை உற்று நோக்கி உள்ளனர்.

மேலும் பழ. நெடுமாறன் கூறியது, தற்போது உலக நாடுகள் சூழல் நன்றாக இருக்கிறது. இலங்கையில் தற்போது காலூன்றுவதற்கு நேரம் வந்துவிட்டது என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார். பிரபாகரன் பொதுவெளியில் தோன்றி  அனைவருடைய எதிர்பார்ப்பையும்,  தமிழீழ மக்களுடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வார் என்று அவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இலங்கையினுடைய சிங்கள மக்கள் ராஜபக்சேவை எப்படி கொண்டாடினார்களோ , அதே போல  தற்போது ராஜபக்சேவை நாட்டை விட்டு வெளியே விரட்டி உள்ளனர். ஆகவே இது இலங்கை மக்களுக்கும், இலங்கையில் இருக்கக்கூடிய தமிழ் மக்களுக்கும் ஏற்ற ஒரு சூழல் இருக்கிறது. இந்த சூழலை பயன்படுத்தி விரைவில் பிரபாகரன் தமிழீழ விடுதலைக்காக மீண்டும் வருவார் என்றும், தமிழீழ விடுதலையை அறிவிப்பார் என்றும் பழ. நெடுமாறன் கூறினார்.