நகைச்சுவை நடிகர் மயில்சாமி சமீபத்தில் மாரடைப்பில் மரணம் அடைந்தார். தன்னுடைய சக்திக்கு மீறி பலருக்கும் பல உதவிகளை செய்தார். ரஜினி கமல் இருவருக்கும் மயில்சாமி வீட்டு மீன் குழம்பு என்றால் மிகவும் பிடிக்கும். கமல் நேராக மயில்சாமிக்கு தொடர்பு கொண்டு மீன் குழம்பு வேண்டும் என கேட்க மயில்சாமியும் உடனே செய்து கொண்டுப் போய் கொடுப்பார். இந்நிலையில் ஒருமுறை கமல் போன் செய்து இன்றைக்கு மீன் குழம்பு வேண்டும் எனக் கூறி போனை வைத்து விட்டார்.

ஆனால் மயில்சாமியின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் மயில்சாமி சென்னையில் உள்ள பெரிய ஹோட்டலில் மீன் குழம்பு வாங்கி கமலிடம் கொடுத்துள்ளார். அதை சாப்பிட்டு பார்த்த கமல் அந்த கடையின் பெயரை சரியாக கூறி அந்த கடை மீன் குழம்பு பிரமாதம் என்றாராம். இப்படி சில சுவாரசியமான சம்பவம் கமல்-மயில்சாமி இடையே நடந்துள்ளது.