
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பாண்டுவா பகுதியில் GSFP தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாணவர்களுக்கு பருப்பு மற்றும் குக்னி வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக முதலில் குக்கரில் பருப்பை வேக வைத்தனர். அதன் பிறகு குக்னிக்காக பட்டாணியை குக்கரில் வேக வைத்தனர்.
அப்போது திடீரென மூடி விலகி குக்கர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் மிலிதத்தா மற்றும் ஆர்த்தி லோஹார் ஆகியோருக்கு முகம் மற்றும் கண்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்களுடைய அலறல் சத்தத்தை கேட்டு பள்ளி நிர்வாகத்தினர் ஓடி வந்து உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.