
இஸ்ரேல் ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்கள் நிலவி வருகிறது. இதற்கிடையில் கடந்த 13ஆம் தேதி அன்று ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்புக் கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உட்பட பல இடங்களை இஸ்ரேல் குறி வைத்து தாக்கியது. ஈரான் தயாரிக்கும் அணு ஆயுதங்களை தடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரான் மற்றும் இஸ்ரேலில் வசிக்கும் தமிழர்களை பாதுகாக்க தேவையான உதவிகள் வழங்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஈரான், இஸ்ரேலில் உள்ள தமிழர்களின் விவரங்களை பெற தொலைபேசி எண்: 0112419300, கைப்பேசி எண்: 9289516712, மின்னஞ்சல் [email protected], [email protected] அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறைக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார்.