
மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் (ssc) நடத்தும் தேர்வுக்கு தமிழகத்தை சேர்ந்த தேர்வர்கள் விண்ணப்பிக்க மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதோடு மாவட்ட வேலைவாய்ப்பு மையங்களில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 7500 காலிப் பணியிடங்களுக்கான ssc தேர்வுக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு முடித்த 18 – 32 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள்.
மாத சம்பளம்: ரூ.25,500 முதல் ரூ.1,51,100 வரை வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 3 முதல் மே 3 வரை விண்ணப்பங்களை அனுப்பலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு ssc.nic.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.