தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி யில் அலெக்ஸ்-அதிர்ஷ்ட லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு தரனேஷ் என்ற 10 மாத ஆண் குழந்தை இருக்கிறது. சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் விளையாடி கொண்டிருந்த தரனேஷ் மருந்து டப்பாவின் மூடியை விழுங்கியதால் மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் தரனேஷை உடனடியாக மீட்டு ராசாமிராசுதார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்கள் விரைந்து செயல்பட்டு குழந்தையின் தொண்டையில் சிக்கி இருந்த மருந்து டப்பாவின் மூடியை அகற்றினர். தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. விரைந்து செயல்பட்டு குழந்தையை காப்பாற்றிய டாக்டர்களை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் பாராட்டியுள்ளார்.