தன் முதல் திரைப்படத்திலிருந்து சினிமா உலகை வியக்க வைத்தவர் தான் டைரக்டர் மணிரத்னம். இதையடுத்து பொன்னியின் செல்வன் திரைப்படம் வாயிலாக மிகவும் பிரபலமானார். பலர் எடுப்பதற்கு தயங்கிய பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் வெற்றிகரமாக இயக்கி முடித்துள்ளார் எனில், அதன் பின்னணியில் அவரது மனைவி சுஹாசினிக்கும் பங்கு இருக்கிறது. பொன்னியின் செல்வனை உருவாக்க கணவருக்கு அனைத்து விதத்திலும் துணையாக இருந்துள்ளார் சுஹாசினி.  அதன்படி படத்தின் புரமோஷன் சுஹாசினியால் பிரமாதமாக திட்டமிடப்பட்டதை படக்குழுவினர் பாராட்டுகின்றனர். மேலும் பிரமாண்ட இசை வெளீயிட்டு விழாவிலும் சுஹாசினி பங்களிப்பானது இருந்தது. ஆகவே மணிரத்தினத்தின் வெற்றிக்கு பின்னணியில் சுஹாசினி இருக்கிறார்.

அதேபோல் தன் படங்களை வெகுஜன மக்கள் ரசிக்கும் வகையில் கலகலப்பாக இயக்கி பெயர் பெற்றவர் சுந்தர்.சி. இவரின் வெற்றிக்கு மனைவி குஷ்பு துணையாக நிற்கிறார். சுந்தர்.சி தயாரிக்கக்கூடிய படங்களின் பணிகளில் அவருக்கு உறுதுணையாக உள்ளார். நடிகராக பயணிக்க ஆரம்பித்த ஆர்யா திருமணத்திற்கு பின் தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். இதில் ஆர்யா படங்களை தயாரிக்க அவருடைய மனைவி சாயிஷா துணையாக உள்ளார்.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. மற்றொரு புறம் வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். சூர்யாவின் பட தயாரிப்பு வேலைகளில் அவருடைய மனைவி ஜோதிகாவுக்கு மிக முக்கிய பங்கு உள்ளது. அதன்பின் திரையுலகில் சம்பாதித்ததை சினிமாவில் முதலீடு செய்யும் ஒரு சிலரில் நடிகை நயன்தாராவும் ஒருவர் ஆவார். இவர் சுமார் 20 வருடங்களுக்கு மேல் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கணவர் விக்னேஷ் சிவனை கரம்பிடித்த பின் நடிப்பை தாண்டி தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.