சின்னத்திரையில் மிகப் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரச்சிதா மகாலட்சுமி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். மேலும் இவர் பிக் பாஸிலும் கலந்து கொண்டு பிரபலமானார். இவர் தன்னுடைய கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார். பிக் பாஸ் வீட்டின் நீண்ட நாட்களாக உள்ளே இருந்து வெளியே வந்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஏற்கனவே சீரியல் மூலம் பல ரசிகர்களை கவர்ந்த இவர் பிக் பாஸ் மூலமும் பல ரசிகர்களை கவர்ந்துள்ளர்.

தற்போது விஜய் டிவியில் உள்ள ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு வருகிறார் ரட்சிதா. இந்த நிலையில் ரட்சிதா சித்திரை திருநாள் அன்று ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை சொல்லியுள்ளார். அதாவது தற்போது 22 லட்சம் மதிப்புள்ள புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளதாகவும் கூறியுள்ளார். அந்த காரோடு தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிட்டுள்ளார் இதை யடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.