பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு பின் ஜெயம் ரவியின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. டைரக்டர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம்ரவி, பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச் சந்திரன் நடித்துள்ள படம் “அகிலன்”. இந்த படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்து உள்ளது.

இதில் ஏராளமான காட்சிகள் அனைத்தும் ஹார்பரில் படமாக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக NOC அனுமதியில் சிக்கல் ஏற்பட்டது. இப்போது அனைத்து அனுமதிகளை பெற்று இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியாக இருக்கிறது.