கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து காவல்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கல்லூரி வளாக காவலாளி, 2 மாணவர்கள், ஒரு முன்னாள் மாணவர் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கைதான நால்வரும் மாணவியை ஹாக்கி மட்டையால் அடித்து ஆபாச வீடியோ எடுத்து அதை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று கூறி மிரட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது.