ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் அருகே இருக்கும் வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு சில பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்று போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகம் படும் படியாக நின்றிருந்த நாட்டுப்படை சோதனை செய்ததில் பத்து பெட்டிகள் பிளாஸ்டிக் சாக்குகளை தைத்து அதனுள் அந்த பெட்டிகளை வைத்திருந்தார்கள்.

அதைப் பிரித்து பார்த்தபோது பெட்டிகளில் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இந்த மாத்திரைகள் போதைக்காகவும் பயன்படுத்துவதாக தெரிவிக்கின்றார்கள். இதையடுத்து 6 லட்சம் மாத்திரைகள், புதிய செல் போன் உள்ளிட்டவற்றை க்யூ பிரிவு போலீசார் அவற்றை பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது மதிப்பு ஒரு கோடியே 20 லட்சம் வரை இருக்கும் என்பதை தெரிய வருகின்றது இதழில் போலீசார் இருபற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்