கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பில்சின்னாம் பாளையத்தில் பிரதீப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பிரதீப் தனது நண்பர்கள் மூன்று பேருடன் கடம்பறைக்கு சுற்றுலா சென்றுள்ளார். நேற்று பிரதீப்பும் அவரது நண்பர்களும் அப்பர் ஆழியார் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் பிரதீப் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து அறிந்த போலீசாரும், வனத்துறையினரும் பிரதிப்பை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் ஒரு பாறை இடுக்கில் சிக்கியிருந்த பிரதீப்பின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.