எஸ் பி ஐ வங்கியின் காப்பீடு உள்ளிட்ட முதலீடுகள் தனிநபர் முடிவுக்கு உட்பட்டது என்றும் வங்கி அதனை திணிக்காது என்றும் எஸ்பிஐ வங்கி தற்போது அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக வாடிக்கையாளர் ஒருவர் ஏன் காப்பீடுகளை எங்கள் மீது திணிக்கிறீர்கள் என்று கேட்டிருந்தார்.

அதற்கு பதில் அளித்து இருக்கும் எஸ்பிஐ வங்கி, வங்கியின் கிளைகள் விழிப்புணர்வுக்காக மட்டுமே காப்பீடு தொடர்பாக பேசுவார்கள். அதனை எடுத்துக் கொள்வது வாடிக்கையாளர்கள் விருப்பம் என்று கூறியுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் பலவிதமான ஏடிஎம் கார்டுகளுக்கு எஸ்பிஐ வங்கி 125 ரூபாய் என்று அளவில் கட்டணம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது