தமிழ் திரையுலகில் தாம்தூம் திரைப்படத்தில் நாயகியாகவும், தலைவி படத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமான கங்கனா ரனாவத், இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் வலைத்தளத்தில் அவ்வப்போது சர்ச்சை கருத்துகள் வெளியிட்டும் வருகிறார்.

இந்நிலையில் கங்கனா வெளியிட்டிருக்கும் பதிவில் “என்னை பற்றி கவலைப்படுகிறவர்கள் ஒரு விஷயத்தை புரிந்துக்கொள்ளுங்கள். நேற்று முன்தினம் இரவு முதல் என்னை சுற்றி சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் எதுவுமில்லை. மேலும் யாரும் என்னை பின்தொடரவும் இல்லை. சரியாக இருந்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் வீட்டுக்குள் புகுந்து உங்களை தாக்குவேன். என்னை மன நோயாளி என்று அழைப்பவர்களுக்கு எதிராக நான் எந்த அளவுக்கு செல்வேன் என தெரியவில்லை” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது பரபரப்பாகி உள்ளது.