சனாதன பேச்சு தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் தீவிர வலதுசாரி சிந்தனையாளர்கள் தங்களது கடுமையான கருத்து விளக்கக் கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் முன்னோர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து சனாதன தர்மத்தை பாதுகாத்தனர்.இப்போது சிலர் சனாதன தர்மத்தை ஒழிப்பதாக பேசுகிறார்கள். நாங்கள் அவர்களை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமாட்டோம்.

மேலும் சனாதனத்திற்கு எதிராக பேசும் அந்த நபரை அணுக வேண்டும் என்றும்,  கண்களை உயர்த்தி அவர்களது ஒவ்வொரு கண்களையும் வெளியே எடுக்க வேண்டும் என்றும், நாக்கை பிடுங்க வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசியிருக்கின்றார். சனாதனத்துக்கு எதிராக பேசும் எவரும் இந்த நாட்டில் தனது அரசியல் அதிகாரத்தையும்,  அந்தஸ்தையும் தக்க வைத்துக் கொள்ள முடியாது என்றும் பேசி இருக்கிறார். கிட்டத்தட்ட வெளிப்படையான ஒரு மிரட்டல் விடுத்திருக்கிறார் என்பதாகத்தான் நாம் இதனை எடுத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடுங்க வேண்டும், கண்களை தோண்ட வேண்டும் என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தற்போது பேசி இருக்கின்றார்.ஒட்டுமொத்தமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மட்டும் அவர் குறிப்பிடாமல் ஒட்டுமொத்தமாக சனாதன தர்மத்திற்கு எதிராக பேசக்கூடிய அனைவரையுமே நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும். அதை ஒருபோதும் பொறுத்துக் கொண்டே இருக்க கூடாது என்பதாகவும் அவர் பேசியிருக்கிறார். சில தினங்களுக்கு முன்புதான் உத்தர பிரதேசத்தில் சர்ச்சை சாமியாராக இருக்கக்கூடியவர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு விலை வைத்திருந்தார். அதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்து இருந்த நிலையில் தற்போது ஒரு மத்திய அமைச்சரே மிக கடுமையான  முறையில் நாக்கை விடுவோம்,  கண்களை நோண்டுவோம் என்று பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.