பொட்டு, கா உள்ளிட்ட திரைப்படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்த ஜெனித்குமார் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் “சைத்ரா”. மார்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்தில் யாஷிகா ஆனந்த் நாயகியாக நடித்து உள்ளார். அதோடு இந்த படத்தில் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர்.

பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கும் இந்த படத்திற்கு சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்து உள்ளார். 24 மணிநேரத்தில் நடக்கும் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. சைத்ரா படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.