பிரபல தெலுங்கு நடிகராக வலம் வருபவர் போசானி கிருஷ்ணா முரளி. இவர் புனேயில் நடைபெற்ற தெலுங்கு சூட்டிங்கில் பங்கேற்றுவிட்டு ஐதராபாத் திரும்பினார். இந்நிலையில் அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

அதன்பின் முரளி குடும்பத்தினரிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு ஐதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். ஏற்கனவே போசானி கிருஷ்ணா முரளிக்கு 2 முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 3-வது முறையாக அவர் கொரோனா தொற்றில் சிக்கியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.