இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர். இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவருக்கு ஓரிரு போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து பவுலிங் பயிற்சிகள் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது அர்ஜுன் டெண்டுல்கரின் இடது கையை நாய் கடித்து அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து அவரால் பவுலிங் பயிற்சியில் ஈடுபட முடியவில்லை. மேலும் அர்ஜுன் டெண்டுல்கர் விரைவில் குணமடைய வேண்டுமென்று  மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.