சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என பரவலாக செய்திகள் பரவி வருகிறது. இது தொடர்பாக எம்.எஸ் தோனி இதுவரை எந்த ஒரு தகவலையும் சொல்லவில்லை. ஆனால் சில கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ் தோனி அடுத்த ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவார் என்று கூறி வருகிறார்கள். இருப்பினும் சில முன்னாள் வீரர்கள் எம்.எஸ் தோனி அடுத்த ஐபிஎல் தொடரிலும் கண்டிப்பாக விளையாடுவார் என நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைப்பிடம் எம்.எஸ் தோனியின் ஓய்வு குறித்து ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்கு அவர் தோனி தன்னுடைய ஓய்வு குறித்து பலமுறை உணர்த்தி விட்டார். இதனால் அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி விளையாட மாட்டார் என்று தான் எனக்கு தோன்றுகிறது என்று கூறியுள்ளார். மேலும் முன்னால் வீரர் கவாஸ்கர் தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கியது அவருடைய சிறப்பை வெளிப்படுத்துவதாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.