தமிழ் திரையுலகில் 80-களில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனர்களில் ஒருவரகாக வலம் வந்தவர் எஸ்ஏ சந்திரசேகர். அண்மை காலமாக எஸ்ஏ சந்திரசேகர் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி டிராபிக் ராமசாமி, கொடி, நான் கடவுள் இல்லை, மாநாடு போன்ற படங்களில் முக்கியமான  கதாபாத்திரங்களில் அவர் நடித்தார். இப்போது எஸ்ஏ சந்திரசேகர் டிவி தொடர் ஒன்றில் நடிக்க ஆரம்பித்து உள்ளார்.

ராதிகா சரத்குமார் தயாரிக்கவுள்ள அத்தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் எஸ்ஏ சந்திரசேகர் நடிக்கிறாராம். இதுபற்றி ராதிகா, “வாழ்க்கை நம்மை பல பயணங்களுக்கு அழைத்து சென்று பல்வேறு விஷயங்களைக் கற்றுத்தருகிறது. எஸ்ஏ சந்திரசேகர் சார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க மற்றும் சிறந்த நடிகர்கள், கலைஞர்களுடன் விஜய் டிவியில் “கிழக்கு வாசல்” எனும் தொடரை ஆரம்பித்துள்ளோம். இதற்கு அனைவரின் வாழ்த்துகளும் தேவை” என குறிப்பிட்டுள்ளார்.