ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் கர்நாடக பாஜக MLA விருபக்சப்பா சென்ற சில தினங்களாக தலைமறைவாக இருந்தார். இதயயடுத்து அவருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் லஞ்ச குற்றச்சாட்டில் கர்நாடக பாஜக எம்எல்ஏ விருபக்சப்பா 48 மணி நேரத்தில் சரணடைய கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையை செய்தியாளர்களை சந்தித்து அவர், பெங்களூரில் தனது வீட்டில் கைப்பற்றப்பட்டது ஊழல் பணம் இல்லை, அது தாங்கள் சம்பாதித்த பணம். ரூபாய் 6 கோடி எல்லாம் தங்களுக்கு ஒரு விஷயமே இல்லை. லோக் ஆயுக்தாவில் அந்த பணத்திற்கான உரிய ஆவணங்களை தாக்கல் செய்வேன் எனவும் அவர் கூறியுள்ளார்.