உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள நஜிபாபாத் காவல் நிலையப் பகுதியில், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் மனைவி ஒருவர், தனது கணவரின் காரை சுத்தியலால் அடித்து நொறுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் கணவன்-மனைவி சண்டையில் தொடங்கி, போலீஸ் நடவடிக்கை வரை சென்றுள்ளது. மனைவி ஹிமானி, தன் கணவர் வீட்டுச் செலவுகளுக்குப் பணம் கொடுக்க மறுத்ததால்தான் இந்தச் சண்டை முற்றியதாகக் கூறப்படுகிறது.
बिजनौर
बिजनौर में लड़की ने किया कार मैकेनिक की दुकान पर हाइवोल्टेज ड्रामा।
गुस्साई लड़की ने मैकेनिक के यंहा खड़ी गाड़ी के तोड़े शीशे।
मैकेनिक ने तहरीर में बताई लड़की के पति की कार खर्च के पैसे ना देने पर तोड़ी कार
पति द्वारा पत्नी को खर्च के लिए रुपये न देने के बजाय कार सही… pic.twitter.com/r9DxJH7Yo2
— Bijnor Express (@bijnorexpress2) November 12, 2025
வீடியோவில், ஹிமானி சுத்தியலுடன் கார் பழுதுபார்க்கும் மையத்தில் (Garage) நிறுத்தப்பட்டிருந்த தன் கணவரின் காரின் அனைத்து கண்ணாடிகளையும் உடைத்துச் சேதப்படுத்துவதைக் காணலாம். bystanders அனைவரும் அதிர்ச்சியில் வேடிக்கை பார்க்க, ஹிமானி தனது செயலைத் தனது போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.
पति ने जेब खर्च नहीं दिया तो पत्नी आग बबूला हो गई। और पति की कार पर अपना गुस्सा उतार दिया।
उसने मैकेनिक के यहां खड़ी पति की कार के सभी शीशे तोड़ डाले।
मामला यूपी के बिजनौर का है।#viralvideo pic.twitter.com/vGwAr8gLBI— Zuber Akhtar (@Zuber_Akhtar1) November 12, 2025
இந்தச் சம்பவம் குறித்து பிஜ்னோர் போலீசார் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், கணவர் தர்மேந்திராவுக்கும் அவரது இரண்டாவது மனைவி ஹிமானிக்கும் இடையே ஏற்பட்ட சண்டையே இதற்குக் காரணம் என்றும், கோபத்தில் ஹிமானி காரை உடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காரால் ₹40,000 மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், பழுதுபார்க்கும் மைய ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில், ஹிமானி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
