தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பிரியங்கா நல்காரி. இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள நிலையில், சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார். நடிகை பிரியங்கா தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீதாராமம் சீரியலில் நடித்து வருகிறார்.

நடிகை பிரியங்கா தொழிலதிபர் ராகுல் வர்மா என்பவரை காதலித்து வந்த நிலையில் தற்போது அவரை மலேசியா முருகன் கோவிலில் வைத்து எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளார். பல போராட்டங்களை தாண்டி நடிகை பிரியங்காவின் திருமணம் மலேசியாவில் உள்ள முருகன் கோவிலில் எளிமையாக நடைபெற்றுள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.