மும்பை நகரின் அடையாளங்களில் ஒன்றான தோபி காட் பகுதியில், கொரிய நாட்டைச் சேர்ந்த சிறுவர்கள் துணி துவைக்கும் தொழிலாளர்களின் கடின உழைப்பை நேரில் கண்டு நெகிழ்ந்த காணொளி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Jung ae Um🇰🇷 living in India🇮🇳 (@wonny_brothers)

இந்தியாவில் வசித்து வரும் கொரியக் குடும்பத்தைச் சேர்ந்த இந்தச் சிறுவர்கள், வெறும் சுற்றுலாப் பயணிகளாக மட்டும் அங்கு செல்லாமல், தொழிலாளர்களின் உழைப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களுடன் இணைந்து துணிகளைத் துவைக்க முயற்சி செய்தனர்.

“உண்மையான இந்திய வாழ்க்கை, உண்மையான உழைப்பு, உண்மையான மரியாதை” என்ற குறிப்புடன் இணையத்தில் பகிரப்பட்ட இந்தக் காணொளி, குழந்தைகளின் மனதில் உழைப்பின் மேன்மையை விதைக்கும் ஒரு சிறந்த பாடமாக அமைந்திருப்பதாகப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்தப் பதிவு, கலாச்சாரம் மற்றும் மனிதநேயப் பகிர்வுக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.