தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அதீத கன மழைக்கு வாய்ப்புள்ளதாக கேரளா, கர்நாடகா மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்திய மாநில ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தமிழ்நாடு, ஆந்திரா, கோவா மற்றும் தெலுங்கானா, மத்திய பிரதேசம் மாநிலங்களிலும் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து கர்நாடகாவில் பல மாவட்டங்களிலும் கேரளாவின் பல மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.