
ரயிலில் பயணம் மேற்கொள்பவர்கள், அதுகுறித்த விதிமுறைகளை அறிந்திருக்க வேண்டும். விதிமுறைகள் நமக்கு தெரிந்திருந்தாலும், அவ்வப்போது அவை திருத்தப்படும் என்பதால் அதை சரிபார்த்துக்கொள்வது நல்லது. இதனிடையே விதிமுறைகளை மீறுவதால் வெறும் அபராதம் மட்டுமின்றி, சிறைவாசமும் அனுபவிக்க வேண்டியிருக்கும்.
இந்திய ரயில்வேயானது விதிமுறைகளின் படி, ஒரு நபர் ரயிலின் கூரையில் பயணித்தால் அவர் ரயில்வே சட்டத்தின் 156-வது பிரிவின் கீழ் 3 மாத சிறைவாசம் (அல்லது) ரூ.500 அபராதம் விதிக்க வேண்டியிருக்கும். அதேபோல் இந்திய ரயில்வே விதிகளின் படி, எந்த நபரும் டிக்கெட்டுகளை விற்க இயலாது. ரயில்வே பயணச் சீட்டுகளை விற்கும் ஒருவர் பிடிபட்டால் ரயில்வே சட்டத்தின் பிரிவு -143ன் கீழ் அவருக்கு ரூ.10,000 அபராதம் (அ) 3 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.