தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இந்நிலையில் இயக்குனர் ராஜமவுலி தற்போது மகேஷ்பாபுவுடன் இணைந்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார். இந்த படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகவும், அதிக பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது படத்தை பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மகேஷ்பாபு உடன் ராஜமவுலி இணையும் படம் ராமாயண காப்பியத்தை மையப்படுத்தி எடுக்கப்பட இருப்பதாகவும், அனுமனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு படம் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மகேஷ்பாபு அனுமான் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் அமேசான் காடுகளில் படத்தின் சூட்டிங் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இதனால் தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.