பீகார் மாநிலத்திலுள்ள சமஸ்தி போர் மாவட்டத்தின் சோனோபூர் கிராமத்தை சேர்ந்தவர் முகேஷ். கடந்த வாரம் இந்திய அரசுக்கு எதிராக சண்டையிட வேண்டும் என்று ராகுல் காந்தி சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் கையிலிருந்த பால் பாக்கெட்டை கீழே போட்டு விட்டேன். அதில் இருந்த 5 லிட்டர் பால் கொட்டியதில் எனக்கு 250 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. இதற்கு ராகுல் காந்தியே காரணம் என்று கூறியுள்ளார். மேலும் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அவர் பேசினார். எனவே ராகுல் காந்தியின் மீது தேச துரோகத்திற்கான பிரிவு 152 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த வாரம் ஜனவரி 15-ஆம் தேதி டெல்லியில் புதிய காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான இந்திரம்மாவின் திறப்பு விழா நடைபெற்றதில் பேசிய ராகுல் காந்தி நமது போராட்டம் பாஜாவுக்கும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிராக மட்டுமே என்று நினைக்க வேண்டாம் நீங்கள் அப்படி நினைத்தால் உங்களுக்கு நிலைமை புரியவில்லை என்று அர்த்தம். மேலும் இந்த கட்சிகளுக்கு எதிராக நாம் போராட வேண்டும் என்று பேசியுள்ளார். இது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான கருத்து எனக்கூறி பா.ஜ.க அவரை விமர்சனம் செய்தது  மேலும் இவரின் பேச்சுக்கு எதிராக அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.