கோவையில் நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின்  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கமல்ஹாசன், ராகுல் காந்தி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு என்னிடம் பேசினார். அவர் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவக்குமார் தலைமையில் நடைபெற இருக்கும் கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.‌

இது தொடர்பான முடிவு விரைவில் எடுக்கப்படும். அதன் பிறகு நாடாளுமன்ற தேர்தல் அவர்களுக்கான பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் எனவும் நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் உத்தரவிட்டார். மேலும் கர்நாடகா சட்டசபை தேர்தலில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்ள அழைத்ததாக கமல் கூறியதால் அவர் பிரச்சாரத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.