தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் பகுதியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது “காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு எதிராக எப்போதும் குரல் எழுப்பி உள்ளது. ஆனால் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தன்னை ஒரு ராஜா என்றும் தெலுங்கானா அவரது ராஜ்ஜியம் என்றும் நினைத்துக் கொண்டு பாஜகவின் துணை அணியாக செயல்பட்டு வருகிறார்.

சந்திரசேகர ராவின் ரிமோட் கண்ட்ரோல் பிரதமர் மோடியிடம்  இருக்கிறது. சமீபத்தில் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஏழைகளுக்கு எதிரான கட்சி ஒன்றை சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் துணையோடு தோற்கடித்தோம். அப்படி தெலுங்கானாவிலும் அதே சம்பவம் நடக்கப்போகிறது என கூறியுள்ளார்