வட மாநிலங்களில் பிரபலமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகைக்கு அந்தந்த மாநில அரசுகள் விடுமுறை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். நடப்பு ஆண்டு ஹோலி பண்டிகையானது மார்ச் 7 -9ம் தேதி வரை நடைபெறயிருக்கிறது. இதனால் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் ஹோலி பண்டிகையையொட்டி விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியிலும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆஃப் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (JIPMAR) நாளை (மார்ச் 8) விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நாளை மத்திய அரசு ஹோலி பண்டிகையையொட்டி பொது விடுமுறை அறிவித்திருக்கிறது. இதனால் நாளை ஜிப்மரில் வெளிப்புற நோயாளிகள் பிரிவும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவசர பிரிவு சிகிச்சை நாளை வழக்கம் போல இயங்கும். அதனை தொடர்ந்து நாளை மறுநாள் (மார்ச் 9) முதல் வெளிப்புற நோயாளிகள் பிரிவு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.