
மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட் ஒன்று உள்ளது. இந்தக் கோட்டின் 27வது அறையில் இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது கோட்டின் வளாகத்திற்குள், இரண்டடி நீளம் உள்ள பாம்பு ஒன்று நுழைந்தது. இதனை பார்த்த காவல்துறையினர் அனைவரையும் எச்சரித்தனர். இதனால் வழக்கு விசாரணைக்கு வந்த மக்கள் அலறியடித்து ஓடினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதோடு வழக்கு விசாரணையும் பாதியில் நிறுத்தப்பட்டது.
கோர்ட் அறைக்குள் இருந்த கோப்புகளுக்கு இடையே அந்த பாம்பு பதுங்கி இருந்தது. இதையடுத்து பாம்பு பிடி வீரர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு சோதனை செய்தனர். அப்போது அந்த பாம்பு தென்படவில்லை. ஒரு மணி நேரம் தேடியும் பாம்பு பிடிப்படாததால் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. சுவற்றில் உள்ள ஓட்டையின் வழியாக பாம்பு வெளியே சென்று இருக்கலாம் என்று கூறப்பட்டது. அருகில் காட்டுப்பகுதி என்பதால் சில நேரம் பாம்புகள் கோர்டு வளாகத்திற்குள் வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.