
இணையத்தில் தினசரி ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள வீடியோ பார்ப்பவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், ஜானு என்ற பெண் புரோட்டா தயாரிக்கிறார். புரோட்டா செய்யும் போது அதில் ரூபாய்.500 நோட்டை பதித்து வைக்கிறார்.
அதன்பின் புரோட்டாவை நன்கு சூடுபடுத்துகிறார். தொடர்ந்து புரோட்டா சாப்பிட தயாரானதும் அதனை எடுத்து தட்டில் வைக்கிறார். அப்போது புரோட்டாவை பிரித்து உள்ளே இருந்து ரூ.500 நோட்டுக்கு பதில் புதியதாக ரூ.2 ஆயிரம் நோட்டு ஒன்றை எடுத்து காண்பிக்கிறார். இதுகுறித்த வீடியோ வெளியாகி 80 ஆயிரத்திற்கும் லைக்குகளை குவித்துள்ளனர்.
View this post on Instagram