தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். கடந்த 2015-ஆம் ஆண்டுக்கு பிறகு நடிகர் விஜயகாந்த் படங்களில் நடிக்கவில்லை. தேமுதிக கட்சியின் தலைவராக இருக்கும் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவின் காரணமாக வீட்டில் முடங்கியுள்ளார். நடிகர் விஜயகாந்த் நிலைமையை பார்த்து ரசிகர்கள் கலங்காத நாளே கிடையாது. இந்நிலையில் பிரபல நடிகர் வாகை சந்திரசேகர் விஜயகாந்தின் தற்போதைய நிலைமை குறித்து ஒரு பேட்டியில் உருக்கமாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி போன்று விஜயகாந்த்க்கும் வயதே ஆகாது என்று நினைத்தேன். காரணம் அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர் கிடையாது. ஆரம்பத்தில் மிக கடினமாக உழைத்து தான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார்.

ஆனால் தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருக்கிறார். அவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்ட பிறகு நான் சந்திக்கவில்லை.நான்  விஜயகாந்தை சந்தித்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகிறது. விஜயகாந்தின் உடல்நிலை மோசமானதற்கு காரணம் அவரிடமிருந்து கெட்ட பழக்கம் தான் என்கிறார்கள். ஆனால் அவரை விட கெட்ட பழக்கம் உள்ளவர்கள் எல்லோரும் தற்போது நலமுடன் வாழ்கிறார்கள். விஜயகாந்தின் இந்த நிலைமைக்கு வேறு ஏதோ காரணம் உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் முன்னதாக இயக்குனர் பிரவீன் காந்தி விஜயகாந்தின் இந்த நிலைமைக்கு காரணம் அவருடைய நண்பர் இப்ராஹிம் ராவுத்தரின் மரணம் தான் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.