திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கனாபுரம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 /12 வயதுடைய மாதேஸ்வரன் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ராஜேஸ்வரி சிவசக்திபுரத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு அனைவரும் தூங்கியுள்ளனர்.

அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் குழந்தையை கடத்தி சென்றுவிட்டார். இதனையடுத்து கண்விழித்த ராஜேஸ்வரி தனது குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்து குழந்தையை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனாலும் குழந்தையை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து ராஜேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.