விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வெள்ளேரிபட்டு கிராமத்தில் திரிசங்கு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விநாயகமூர்த்தி(16) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட விநாயகமூர்த்தி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விநாயகமூர்த்தியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.