தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழவாசல் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சதீஷ்குமாருக்கு புஷ்பா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சதீஷ்குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனால் வாழ்க்கையை வெறுத்த புஷ்பா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று புஷ்பாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.