திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொண்டசமுத்திரம் பட்டியில் சபரீஷ்(20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நண்பர்களுடன் சபரீஷ் அப்பகுதியில் இருக்கும் தனியார் தோட்டத்துக்கு கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வலிப்பு வந்ததால் சபரீஷ் தண்ணீரில் மூழ்கினார்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சபரீஷின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்