கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கணபதிபுரம் கோவில்புரம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எலக்ட்ரீசியனான தனிஷ் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனிஷுக்கு திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

நேற்று முன்தினம் தம்மத்துகோணம் பகுதியில் உள்ள தெருவில் மின் சீரமைப்பு பணியில் தனிஷ் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட தனிஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனிஷ் பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.